நீதிமன்றத்தின் சுயாதீன தன்மை மற்றும் ஊடக சுதந்திரம் ஆகியவை பாதுகாக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகொரல்ல தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கூட ஊடகங்களுக்கு தடை விதிக்கப்படவில்லையென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். எனினும் அவரது ஆட்சி காலத்தில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். சிலர் கடத்தப்பட்டனர்.
மேலும் சிலர் காணமலாக்கப்பட்டதாக அமைச்சர் தலதா அத்துகொரல்ல தெரிவித்துள்ளார். தற்போதய அரசாங்கம் ஊடகசுதந்திரத்தை உறுதிசெய்துள்ளது.
தனியார் ஊடகங்கள் அரசாங்கததை கடுமையாக விமர்சிக்கின்றன. இதுவே ஊடக சுதந்திரம் உறுதிசெய்யப்பட்டுள்ளதற்கான சிறந்த சாட்சியென அமைச்சர் தலதா அத்துகொரல்ல தெரிவித்துள்ளார்.