அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன கையொப்பமிட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய அவசரகால சட்டத்தை நீடிக்கும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 2வது பிரிவில் அவசரகால சட்டத்தை நீடிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.