மினுவங்கொட பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவத்தையடுத்து கைதுசெய்யப்பட்டவர்களில் 32 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
மினுவங்கொட பகுதியிலுள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் உட்பட பள்ளிவாசல்கள் மீது கடந்த 13ம் திகதி இரவு தாக்குதல் நடத்தப்பட்டது.
அதற்கமைய கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் மினுவங்கொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போதே அவர்களுக்கு நீதவான் பிணை வழங்கியதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.