கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஹரகொடெல்ல பகுதியில் இருதரப்பிற்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்றிரவு 11.00 மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
மோதலின்போது காயங்களுக்குள்ளான மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் கத்திக்குத்துக்கு உள்ளாகி பலத்த காயமடைந்திருந்த ஒருவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.
46 வயதான ஒருகொடபுர வெஹரகொடெல்ல பகுதியை சேர்ந்த ச்சூட்டியா எனப்படும் சுகத் இந்திரஜித் என்பவரே உயிரிழந்தவராவார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கிரேண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.