பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்காக நட்டஈடு வழங்க ஆயிரத்து 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. நெற்பயிர்ச்செய்கை இடம்பெறும் ஐந்து ஏக்கர் காணி மற்றும் ஏனைய பயிர்ச்செய்கைகள் இடம்பெறும் இரண்டு ஏக்கர் காணி ஆகியவற்றுக்கு இலவசமாக காப்புறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை கடந்த காலங்களில் காணப்பட்ட வரட்சியினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்காக விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை அடுத்த மாதம் 15ம் திகதிக்கு முன்னர் நிறைவுக்கு கொண்டுவரப்படுமென விவசாய திணைக்களம் தெரிவிக்கிறது.