தீவிரவாதி மொஹமட் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிவந்த சந்தேகநபரொருவர் பயங்கரவாத ஒழிப்பு விசாரணைப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அளுத்கம பொலிஸ் பிரிவு அதிகாரிகள் தர்கா நகர் பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கிறது.
மொஹமட் பஷீர் மொஹமட் பஸ்ஹான் எனப்படும் சந்தேகநபரை தடுத்துவைத்து விசாரணை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் பயங்கரவாத ஒழிப்பு விசாரணைப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.