பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையில் தான் குற்றவாளியென உறுதிப்படுத்தப்பட்டால் அரசியலிலிருந்து விலகவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். தெரிவுக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் சகல அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சியின் நியூஸ் மோர்னிங் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். என் மீதும், எனது சமூகம் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யுங்கள். அதில் நான் ஒரு குற்றமேனும் செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் அமைச்சு பதவியிலிருந்து மாத்திரமல்ல, அரசியல் வாழ்வில் இருந்தும் விலகவுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் இங்கு சுட்டிக்காட்டினார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/No2c9Z77q9w”]