ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமுன்ற உறுப்புரிமையை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ஆணைக்கோர் மனுவை விசாரணைக்கு எடுக்காமல் முதல் சந்தர்ப்பத்திலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த அடிப்படை ஆட்சேபணைகளை ஏற்றுக்கொண்டதன் பின்னரே இவ்வாறு உத்தரவிடப்பட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டதரணி மற்றும் ஏனைய பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டதரணிகள் அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைத்து இந்த மனுவை முதல் சந்தர்ப்பத்திலேயே நிராகரிக்குமாறு இதற்கு முன்னர் கோரியிருந்தனர்.
மனுவை தாக்கல் செய்யும் போது குறித்த மனுதாரர் உறுதிப்படுத்தப்படாத அச்சு பிரதியுடனான ஆவணத்தை இதில் இணைத்திருந்ததாக அங்கு ஜனாதிபதி சட்டதரணி கே.கணகஈஸ்வரன் குறிப்பிட்டார். இந்த மனுவை கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷர்மிலா கோணவல தாக்கல் செய்திருந்தார்.