பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த சீர்த்திருத்த மனுவை ஆராய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் எதிர்வரும் 30ம் திகதியை நிர்ணயித்தது.
டீ.ஏ ராஜபக்ஷ நினைவுதூபி நிர்மாணப்பணிகளுக்கு என 33.9 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் மூவர் அடங்கிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை செல்லுப்படியற்றதாக்குமாறு கோரியே கோட்டாபய ராஜபக்ஷ சீர்திருத்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.