உலக கிரிக்கட் வரலாற்றில் மிகப்பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி அனைத்து கிரிக்கட் இரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர்தான் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் கெப்டன் கூலுமான மகேந்திர சிங் தோனி .அவரது இரசிகர்களுக்கு அவர் ஒரு விடயத்தை சொல்லியிருக்கிறார்.தான் கிரிக்கட் போட்டிகளிலிருநது ஓய்வு பெறற் பிறகு ஓவியத்துறையில் ஈடுபாடு காட்டி சிறந்த ஓவியராக போவதாக தெரிவித்துள்ளார்.தனக்கு ஆரம்பத்தில் ஓவியம் வரைவதிலேயெ ஆர்வம் இருந்ததாகவும் அதன் பின்னர் தான் கிரிக்கட்டில் அவதானம் செலுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ள தோனி அவ்வாறு கிரிக்கட்டில் அவதானம் செலுத்திய போதும் ஓவியம் தீட்டுவதை விட்டுவிடவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனது முதலாவது ஓவிய கண்காட்சி நிகழ்வினை நடத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டள்ளளேன்.இருந்த போதிலும் அதற்கு சில காலம் எடுக்கும்.அதே போன்று தான் வரைந்த தனக்கு பிடித்த ஒரு ஓவியத்தையும் இரசிகர்களுக்காக அவர் வெளிக்காட்டியுள்ளார்.அதில் ஒரு சிறுவன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினுடைய மஞ்சல் நிற ஜேசியுடன் கையில் துடுப்பாட்ட மட்டையையும் பந்தினையும் வைத்து கொண்டு வெற்றிக்களிப்பில் நிற்பது போன்ற ஒரு ஓவியத்தை வரைந்து அவரது இரசிகர்களுக்காக வெளிப்படுத்திக்காட்டியுள்ளார்.அது மட்டுமல்ல தன்னுடைய ஓவியத்தில் ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டுமெனில் அதனை தன்னிடம் கூறுமாறும் அதனை ஏற்று திருத்திக்கொள்ள தயாராக இருப்பதாகவும் தோனி வெளியிட்டுள்ள காணொளியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
”சாதனையாளர்கள் சும்மா இருப்பதில்லை-அதற்கு தோனி ஓர் எடுத்துக்காட்டு”