தென் கிழக்காசியாவின் மிகப் பெரிய புத்தர் சிலை வியட்நாமில் உருவாக்கப்பட்டு வருகின்றது. குறித்த சிலை புத்தா அமிதாபா என அழைக்கப்படுகின்றது.
72 மீட்டர் உயரத்தில் புத்தா அமிதாப உருவாக்கப்பட்டுள்ளதாக வியட்நாம் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2015 ம் ஆண்டில் ஆரம்பமான குறித்த சிலையின் கட்டுமானப் பணிகள் எதிர்வரும் 2020 ம் ஆண்டு நிறைவடையுமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சிலையில் மொத்தமாக 13 மாடிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அதில் 12 மாடிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை வெண்கலத்தால் செய்யப்பட்ட மிக உயரமான புத்தர் சிலையும் வியட்நாமிலேயே உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.