சமூக ஊடகங்கள் மீதான தற்காலிகத் தடை நீக்கப்பட்ட போதிலும் சமூக ஊடகங்கள் வாயிலாக கடும் போக்குவாதத்தைத் தூண்டக்கூடிய விடயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என பொலிசார் எச்சரித்துள்ளனர்.
இவ்வாறான நபர்கள் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான றுவான் குணசேகர தெரிவித்தார்.