ஈரானுக்கு பயணிக்க வேண்டாமென பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இரட்டை குடியுரிமையைக் கொண்ட பிரித்தானிய ஈரானியர்கள் மீதான ஈரான் அரசாங்கத்தின் தொடர்ச்சியான மோசமான அணுகுமுறையை கருத்திற் கொண்டே குறித்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விடயம் தொடர்பில் ஈரானுக்கு பிரித்தானிய அரசாங்கம் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும் ஈரான் அரசின் நடத்தை தீவிரமடைந்துள்ளதாக பிரித்தானியாக வெளிவுறவுத் துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட தெரிவித்துள்ளார்.