பொது மக்களை அச்சம் மற்றும் ஆத்திரமூட்டும் வகையில், வதந்திகள் மற்றும் போலி பிரசாரங்களை மேற்கொள்ளல், வாய் பேச்சின் ஊடாகவோ அல்லது வேறு எந்த முறையிலோ தகவல்களை வழங்குதல் மற்றும் பரப்புதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டாம் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக அவசரகா சட்டத்தின் கீழ் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான தவறுக்கு 3 மாதங்களுக்கு குறைந்த கடூழிய சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
அத்துடன் எந்தவொரு நபரும் யுத்தத்தினை தூண்டுதல், அல்லது வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் தேசிய இன மற்றும் சமய குரோதங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பட கூடாது. இவ்வாறான தவறுகளை இழைப்போருக்கு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க முடியும். இதன்போது குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் 10 வருடத்திற்கும் கூடுதலான கடூழிய சிறை தண்டனையை விதிக்க முடியும்.
வாய் பேச்சின் ஊடாகவோ, சமிக்ஞைகள் மூலமோ அல்லது வேறு முறைகளிலான செயற்பாடுகள் ஊடாகவோ பல்வேறு இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் இனவாதத்தையோ அல்லது எதிரிகள் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதோ பாரிய குற்றமாகும்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இவ்வாறான நபர்களுக்கு எதிராக சிறை தண்டனை வழங்க முடியும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இதனால் நாட்டில் தற்போது நிலவுகின்ற நிலைமையின் கீழ் இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து தவிர்ந்துக் கொள்ளுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.