தேசிய வெசாக் நிகழ்வு ஹிக்கடுவை தெல்வத்த புரான ரத்பத் ரஜமகா விஹாரையில் ஆரம்பித்து வைப்பதற்காக சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. சுமார் ஐந்து இலட்சம் மின்குமிழ்களினால் விஹாரையும் அதனை அண்டியுள்ள வீதிகளும் நேற்று இரவு முதல் ஒளியூட்டப்பட்டன.
ஜனாதிபதியின் தலைமையில் விஹாரைக்கு முன்னால் உள்ள நினைவு பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் தேசிய வெசாக் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இவ்விஹாரை புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டு அதன் உறுதிப்பத்திரமும் மகா சங்கத்தினரிடம் கையளிக்கப்படவுள்ளது. இப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட விஹாரைகள் மற்றும் அறநெறி பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு 17 கோடி ரூபா நிதியும் வழங்கப்படவுள்ளது.
அரச வெசாக் நிகழ்வையொட்டி நினைவு முததிரையொன்றும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. தேசிய வெசாக் நிகழ்வையொட்டி நாடு பூராகவும் உள்ள விஹாரைகளில் பல்வேறு பின்கம நிகழ்வுகளை நடத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. விசேட பூஜைகளுக்கு முதலிடம் வழங்கி புத்த பெருமானின்; பிறப்பு, இறப்பு, ஞானம் பெற்ற நிகழ்வுகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சிங்கள தமிழ் முஸ்லிம் ஆகிய அனைத்து இன மக்களினதும்; பங்களிப்புடன் மாத்தறை நகர் வெசாக் நிகழ்வுக்கென அலங்கரிக்கப்பட்டுள்ள விதத்தை காணக்கூடியதாக உள்ளது. எவ்வித இன வேறுபாடுகளும் இன்றி நாட்டுக்கு முன் உதாரணத்தை வழங்கும் நோக்கில் தாம் செயற்படுவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
குருநாகல் மக்களும் இம்முறை வெசாக் நிகழ்வை கொண்;டாடுவதற்கு கூடிய ஆர்வத்துடன் செயற்பட்டு வருகின்றனர். குருநாகல் நகர் வெசாக் அலங்காரங்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பலாங்கொட பிரதேசததில் உள்ள சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெசாக் நிகழ்வுக்கென நகரை அலங்கரிக்கும் விதத்தை காண கூடியதாக இருந்ததது. இன, மத, வேறுபாடுகளை கைவிட்டு இவங்கையர்களாக ஒன்றிணைந்து வெசாக் நிகழ்வை கொண்டாட இவர்கள் இணைந்துள்ளனர்.
எப்பாவெல வர்த்தக சங்க உறுப்பினர்கள் எப்பாவெல நகரை பௌத்த கொடிகளினால் அலங்கரித்துள்ளனர். இந்நிகழவில் முஸ்லிம் மக்களும் ஒன்றிணைந்து செயறபட்டமை விசேட அம்சமாகும். இவர்கள் அனைவரும் சகவாழ்வுடனும் சமாதானத்துடனும் ஒன்றிணைந்து செயற்பட்டமையை அவதானிக்க முடிந்தது.