நாட்டின் மூன்று தசாப்தங்களாக நிலவிய கொடிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவை, அர்த்தமுள்ளதாக கொண்டாட நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இராணுவ வீரர்கள் நினைவு தின நிகழ்வு எதிர்வரும் 19 ம் திகதி முதல் 22 ம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதன்போது இராணுவத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இராணுவ வீரர் நினைவுத்தூபிக்கு அருகில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.