Baticalo Campus எனும் பெயரில் மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் பல்கலைக்கழகம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு கோப் குழு தீர்மானித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கோப்குழு எதிர்வரும் 21 ம் திகதி கூடவுள்ளதாக அதன் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பல்கலைக்கழகத்தினை அரசாங்கத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற துறைசார் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை குறித்த பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து பாராளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழு தீர்மானிக்குமென பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.