இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக கிண்ண தொடரில் இந்திய அணி உலக கிண்ணத்தை கைப்பற்றும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவ்ரவ் கங்குலி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணி தலைவர் கோலி அதே போல் உப தலைவர் ரோஹித்த சர்மா, தோணி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணிக்கு சிறந்த பலமென’று தெரிவித்த அவர் பாகிஸ்தான் அணியும் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாட கூடிய அணி என தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கெதிராக சம்பியன் கிண்ணத்தையும் டி-20 உலக கிண்ணத்தையும் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து மண்ணில் வைத்து கைப்பற்றியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.