பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்க யாழ் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
எல்.ரி.ரி.ஈ அமைப்பின் தலைவரின் புகைப்படங்கள் பாததைகள் ஆகியவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 3 ம் திகதி இவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய அவர்களை சரீர பிணையில் விடுவிக்க நீதவானினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை இவர்கள் மீதான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.