த பினேன்ஸ் தனியார் நிறுவனத்தினை கண்காணிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை அமுல்படுத்த தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 15ம் திகதி முதல் 3 மாதங்களுக்கு இந்த நடைமுறைகள் அமுல்படுத்தப்படும்.
த பினேன்ஸ் தனியார் நிறுவனத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட, நிறுவனம் தொடர்பான மறுசீரமைப்பு பிரேரணை தொடர்பில் ஆராய்வதற்காகவே இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிறுவனத்தின் வைப்பாளர்கள் மற்றும் ஏனைய வாடிக்கiயாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மறுசீரமைப்புதிட்டத்தை அமுல்படுத்த உரிய வசதிகளை அழிப்பதற்காக புதிய வைப்புக்களை ஏற்றுக்கொள்ளுதல், கடன் மற்றும் முற்பணம் வழங்குவதை கைவிடுதல் ஆகிய திட்டங்கள் இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு தமது வைப்புகளுக்காக வழங்க வேண்டிய வட்டி இலங்கை மத்திய வங்கியின் விதிமுறைகளுக்கு அமைய வழங்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விபரங்களை 0112 477 573 அல்லது 0112 477 504 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் பெற்று கொள்ளலாம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.