இவ்வாண்டுக்கான வாக்களார்களை பதிவு செய்வதற்கான மாதிரி படிவங்கள் இன்று முதல் விநியோகிக்கப்பட்டு வருவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தொடர்பான மாதிரி விண்ண படிவங்கள் இன்று முதல் விநியோகிக்கப்பட்டு வருவதுடன், இவற்றை மீளப்பெறும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென செலயகம் தெரிவித்துள்ளது.
இம்முறை வீ.சி மாதிரி படிவத்துடன், மற்றுமொரு ஆவணம் மக்களுக்கு வழங்கப்படுமென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
16 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை இணை ஆவணத்தில் குறிப்பிட வேண்டும்.
அத்துடன் இந்த ஆவணத்தில் மாற்றுதிரனாளிகள் தொடர்பான தகவல்களும் குறிப்பிடப்பட வேண்டும். மாற்று திரனாளிகள் பற்றிய சரியான தரவுகள் இல்லாமையின் காரணமாகவே தேர்தல் செயலகம் இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.