ஈரான் முன்னெடுக்கும் ஏதாவது செயற்பாடுகள் அமெரிக்காவை பாதிக்குமானால் ஈரான் மிக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்தின் புஜைரா துறைமுகத்திற்கு அருகில் சவூதி அரேபியாவின் இரு எண்ணெய் கப்பல்கள் உட்பட 4 சரக்கு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதுவரை தாக்குதல் தொடர்பான எவ்வித தகவல்களும் வெளியாகாத நிலையில் இதன் பின்னணியில் ஈரான் இருக்கலாமென அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளது. இதனையடுத்தே டொனாட்ல்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.