சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் கடன் உதவியின் 5 வது தவணையை விடுவிப்பதற்கு அதன் நிறைவேற்று குழு அனுமதியளித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்குவதற்கான இணக்கப்பாடு 2016 ம் ஆண்டு எட்டப்பட்டது.
3 வருட திட்டத்தின் கீழ் இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டது. இதன் 5 வதும் இறுதியுமான தவணைக்காக 164.1 மில்லியன் அமெரிக்க டொலர் விடுவிக்கப்படவுள்ளது.
நேற்று கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழு இந்த கடன் திட்டத்தை மேலும் ஓராண்டினால் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கமைய அடுத்தாண்டு ஜூலை 2 ம் திகதி வரை அக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.