அரசியல் துறையிலும் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ள அவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் பொலிசார் தெரிவித்துள்ளனர். காபூல் நகரில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துமாறு குரல் கொடுத்த மினா மங்கல் பல்வேறு உயிர் அச்சுறுத்தலுக்கும் உட்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவரின் கொலை தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.