ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வைத்திய பீடத்தின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகுமென பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறித்த மாணவர்கள் 14ம் திகதி தமது விடுதிகளுக்கு திரும்பவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.