பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய வேலைத்திட்டம் அவசியமென ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடத்தப்பட்ட மிலேச்சத் தனமான தாக்குதல் இதை வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படுமெனவும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.