அமெரிக்காவுக்கு சீனா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனா பொருட்கள் மீது வரி அதிகரிக்கப்பட்டால் அதற்கு பதில் வழங்க தயங்கப் போவதில்லையென சீனா குறிப்பிட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக சமர் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார முறுகல் நிலை உருவானது. அதற்கு தீர்வு காண இரு நாடுகளும் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தன. எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இருநாடுகளுக்கும் இடையில் மீண்டும் வர்த்தக முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.