பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக சகல நாடுகளினதும் ஒத்துழைப்புடன் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் என்டனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலுடன் குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை அழிப்பதே முதற்கட்ட தேவையாகும். தகவல் பரிமாற்றம், சட்ட கட்டமைப்பை வலுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அனைத்து உறுப்பு நாடுகளும் கவனம் செலுத்த வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் என்டனியோ குட்டேரஸ் மேலும் தெரிவித்துள்ளார்.