பலாங்கொட வல்லேபொட பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். வல்லேபொடயிலிருந்து, அல்லேஅராவ வரை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிவந்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காயமடைந்தவர்கள் பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 19 பெண்களும், நான்கு ஆண்களும் உள்ளடங்குகின்றனர். சாரதியின் கவனக்குறைவினால் பஸ்ஸானது வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பலாங்கொட பொலிஸார் தெரிவித்தனர்.