தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாரூக் மொஹமட் பவாஸுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டடார். அவரை பிணையில் விடுவிக்குமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர்.
எனினும் குறித்த நபர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளதால், அவருக்கு பிணை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லையென நீதிபதி லங்கா ஜயரத்ன தெரிவித்தார். அதற்கமைவாகவே அவருக்கு எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.