பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்கை படமாக தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியது மகாநதி. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரமாகவே மாறி நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அத்துடன் அவரின் நடிப்பு திறமையை கண்டு பலரும் பாராட்டியதோடு அவருக்கு விருதுகளும் குவிந்தது. வெளியான சுயசரிதை படங்களில் இப்படம் மிகுந்த வரவேட்பை பெற்றதுடன் வசூல் சாதனையும் படைத்தது.
இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் ஷாங்காய் திரைப்பட விழாவில் இத் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. இதில் நடிகை கீர்த்திக்கு சிறந்த நடிகைக்கான விருதுக்கு தெரிவாகலாம் என நம்பப்படுகிறது.