பாடசாலைக் கற்றல் நடவடிக்கைகளுக்காக இன்று திங்கட் கிழமை பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். தரம் 5 க்கு மேற்பட்ட வகுப்புக்களுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக இன்று பாடசாலைகள் திறக்கப்படும். எதிர்வரும் 13 ம் திகதி ஆரம்ப பிரிவு மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.