தொழிற்கல்வி தொடர்பான தேசிய கொள்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் டபிள்யூ ஐ சிறிவீர தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கொள்கையை கையளித்தனர்.
தேசிய கல்வி ஆணைக்குழு தொழில் மற்றும் தொழிற்பயிற்சி தொடர்பான தேசிய கொள்கையை வகுத்துள்ளது. நவீன உலகத்திற்கு ஏற்ற விதத்தில் தொழில் மற்றும் தொழிற்பயிற்சி மேம்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.