பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு தரப்பினரால் வழங்கப்படும் எழுத்துமூல உத்தரவாதத்தின் பின்னர் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும். உபவேந்தர்கள் உரிய திகதியை தீர்மானிப்பரென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் 8ம் திகதி ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென நிர்வாகம் அறிவித்துள்ளது.