நாட்டிலுள்ள பாடசாலைகள் நாளையதினம் முழுமையான சோதனைக்குட்படுத்தப்படவுள்ளன. அனைத்து பாடசாலைகளும் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுமென கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளன. பாடசாலைகளின் பாதுகாப்புக்கு படையினர் உத்தரவாதம் வழங்கியுள்ளதாக கல்வியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.