கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வேலைத்திட்டங்கள் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நாட்டுக்குள் நுழைவதை தடுக்கும் வகையிலேயே குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு விசேட மென்பொருள் அடங்கிய கணினி கட்டமைப்புகள் விமான நிலையத்தின் அனைத்து கருமபீடங்களிலும் பொருத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச பொலிசாரின் தரவுகளுக்கு அமைய குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டிலிருந்து வெளியேறும் நபர்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயற்திட்டங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.