சகல மின் உற்பத்தி நிலையங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு முப்படையினர் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த 22ம் திகதி முதல் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொலிஸாரும், முப்படையினரும் இப்பணிகளை முன்னெடுத்துள்ளனர். அதேபோல் எவ்வித தடையுமின்றி மின் விநியோகத்தை மேற்கொள்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.