நாடு முழுவதிலும் தொடர்ந்தும் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பு பிரிவு தெரிவிக்கிறது. சந்தேகத்திற்கிடமான வாகனங்கள், நபர்கள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகள் சந்தேகத்திற்கிடமான சகல விடயங்கள் குறித்தும் பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவுக்கு அறிவிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை எடேரமுல்ல அக்பர் பிரதேசத்திற்கு அருகில் விசேட தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. விமானப்படையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இதனை முன்னெடுத்தனர்.
அதேபோல் பேலியகொட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது வீடொன்றுக்கு அருகில் இருந்து இரு வாள்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே சம்மாந்துறை பகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும் விசேட தேடுதல் நடவடிக்கை இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.