இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாஹு மீண்டும் பதவியேற்றுக்கொண்டுள்ளார். கடந்த 9ம் திகதி இஸ்ரேலில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாஹு தலைமையிலான லிக்குட் கட்சி மற்றும் முன்னாள் இராணுவ தளபதி பென்னி கான்ட்ஸ் தலைமையிலான புளு அன்ட் வைட் கட்சி என்பன வெற்றிபெற்றது.
இந்நிலையில் லிக்குட் கட்சிக்கு 67 உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப்பெற்ற நிலையில் பெஞ்சமின் நெதன்யாஹு ஐந்தாவது முறையாக இஸ்ரேல் பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து புதிய பாராளுமன்றமும் பதவியேற்றுக்கொண்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.