சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும். வியர்வையை உரமாக்கி, வீட்டுக்கும், நாட்டுக்கும் உழைக்கும் தொழிலாளர்கள் இன்று தமக்கான திருநாளை கொண்டாடுகின்றனர். இலங்கையிலுள்ள மொத்த சனத்தொகையில் 50.2 வீதமானோர் தொழிலாளர்களாவர். இவர்களில் 32.4 வீதமானவர்கள் பெண்களென சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த 21ம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து இந்த வருடத்திற்கான மே தின கொண்டாட்டங்களை அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ரத்துச்செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.