மீள அறிவிக்கும் வரை மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் கடற்படை பணிகளிலிருந்து விலகியிருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையின் வடக்கு, வடமேல், வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மீன்பிடி சமூகத்திற்கும், கடற்படையினருக்கும் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.