இராணுவ சீருடைக்கு ஒத்த 600 க்கும் மேற்பட்ட ஆடைகள் கைப்பற்றப்பட்டமை குறித்த விசாரணைகள் பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குருநாகல் மல்லவபிட்டிய பகுதிக்கு அருகாமையிலுள்ள பல கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இராணுவ சீருடைகள் கைப்பற்றப்பட்டன. இவற்றுக்கு மேலதிகமாக இராணுவ சீருடையை தைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற துணிகளும் துப்பாக்கியின் பகுதியொன்றும் ரைபெல் மற்றும் வாள்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் இதன்போது கைப்பற்றப்பட்டன.
பல்வேறு பொலிஸ் நிலையங்களின் தகவல்கள் அடங்கிய போலி உத்தியோகபூர்வ முத்திரைகளும் பெருந்தொகையான வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களும் செல்லிடத் தொலைபேசிகளும் இங்கிருந்து கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து ஒரு சில சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.