பேராயர் மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை உள்ளிட்ட சகல கத்தோலிக்க மதத்தலைவர்களினதும் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேராயருக்கு குண்டு துளைக்காத மோட்டார் வண்டிகள் இரண்டை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு பிரிவுக்கு மக்களின் உச்ச கட்ட ஒத்துழைப்பு அவசியமென அனைத்து மத அமைப்பு தெரிவித்துள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென அதன் தலைவர் பேராசிரியர வணக்கத்திற்குரியர் இத்தபானே தம்மலாங்கார தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த மகா சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதில் பேராயர் மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை மற்றும் அகில இலங்கை முஸ்லிம் புத்திஜீவிகளின் சங்கத்தின் செயலாளர் பசீல் பாறுக் மௌலவி ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.