இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் காணமல்போயுள்ளனர். வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டிடங்கள் , குடியிருப்புக்கள், பாலங்கள் வீதிகள் என உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சீரற்ற காலநிலையில் இந்தோனேஷியாவின் 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.