ஸ்பெய்னில் சோஷலிச கட்சி அந்நாட்டு பொதுத் தேர்தலில் வெற்றியை பதிவு செய்துள்ளது. நான்கு வருட காலத்தில் ஸ்பெய்னில் இடம்பெற்ற 3 வது மிகப்பெரிய தேர்தலாக இது கருதப்படுகிறது.
பிரதமர் பெட்ரோ சென்சஸின் கட்சி 29 வீத வாக்குகளை வெற்றிபெற்றுள்ளது. எனினும் அரசாங்கத்தை அமைப்பதற்கு இதுபோதுமானதாகவில்லையென அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவும் ஆளும்தரப்பு எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.