அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாகவுள்ள அனைத்து வகையிலான முகத்திரை பயன்பாட்டிற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் பொது மக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால் அவசரகால சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.
அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் அடிப்படை அளவீடாகவுள்ள நபரரொருவரின் முகத்தை தெளிவாக காணக்கூடியதாய் இருப்பது அவசியமாகும். என்பது குறித்த கட்டளையின் ஊடாக மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு எந்தவொரு சமூக பிரிவையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்காத வகையில் அமைதியான நல்லிணக்கம் மிக்க சமூகமொன்றை உருவாக்குவதற்காக ஜனாதிபதியினால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.