தேசிய தௌஹீத் ஜமாத் மற்றும் ஜமாத்ஹை மில்லத்து இப்றாஹீம் பீ செய்லானி ஆகிய அமைப்புக்கள் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காணப்படும் அதிகாரத்திற்கு அமைய அவசரகால சட்டத்தின் கீழ் குறித்த இரு அமைப்புக்களையும் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களாக பிரகடனப்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த அமைப்புக்களுக்கு உரித்தான அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் செயற்பாடுகளை இடைநிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.