உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் தொடர்பில் ஊடகங்களில் வெளியான தகவல்களில் முரண்பாடு இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்; அணில் ஜாசிங்க விடேச அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். இவ்வாறான குண்டுதாக்குதல்களினால் உடலில் பாரிய பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் ஒருசில உடல்கள் சேதமடைந்து வீசப்படுகின்றமையினால் அடையாளம் காண முடியாத நிலை ஏற்படும்.
இதன்காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கையை துள்ளியமாக கணிப்பிடுவதில் சிரமங்கள் இருப்பதாகவும் ஒவ்வொரு தினமும் அண்மித்த எண்ணிக்கை தொடர்பிலான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதாக அவர் கூறுகின்றார். இதன் முதல் கணக்கெடுப்பின் படி 290இல் இருந்து 253ஆக அது குறைவடைந்திருப்பதாகவும் ஊடகங்களில் வெளியானதை போன்று 359 பேர் உயிரிழக்கவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த 485 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, றாகம வைத்தியசாலை, ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் நீர்கொழும்பு வைத்தியசாலை ஆகியவற்றில் காயமடைந்தோர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். நேற்று மாலை வரையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 149ஆக குறைவடைந்துள்ளது. வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்;ட நோயாளிகளில் ஆறு பேர் மாத்திரமே உயிரிழந்திருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 280ஆக அதிகரித்துள்ளதாக சம்பவத்திற்கு மறுதினம் தெரிவிக்கப்பட்டது. அதில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் 26 பேரும், நீர்கொழும்பில் 102 பேரும், றாகம வைத்தியசாலையில் 7 பேரும், களுபோவில வைத்தியசாலையில் 3 பேரும் கொழும்பு பிரதான சட்ட மருத்துவ பிரேத அறையில் 140 என குறிப்பிடப்பட்டிருந்தது.
கொழும்பு பிரதான சட்ட மருத்துவ பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த உடல்களை தவிர ஏனையவை மிக வேகமாக உறவினர்களிடம் கையளிக்கப்பட்டன. கொழும்பு பிரதான சட்ட மருத்துவ பிரேத அறையில் இரவு பகல் பாராமல் விசேட வைத்திய நிபுணர்கள் நீதவான்கள், மற்றும் ஏனைய அலுவலக ஊழியர்கள் இணைந்து செயற்பட்டாலும் இந்த உடல்களை கையளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.
சகல வெளிநாட்டவர்களினதும் உடல்கள் வைத்தியசாலையின் பிரேத அறைகளுக்கு கொண்டு வருதல், 3 ஹோட்டல்களில் இடம்பெற்ற வெடிப்புக்களினால் உயிரிழந்தோரின் உடல்கள் சிதைவடைந்தமையும் ஏனைய பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புக்களை விட இதன் எண்ணிக்;கை அதிகரித்திருந்தமையும் இதற்கு காரணம் ஆகும். வெளிநாட்டவர்களின் உடல்களை கையளிப்பதற்காக அவர்களது உறவினர்கள் வெளிநாடுகளில் இருந்து வருகை தர வேண்டும். அவ்வாறு இல்லையெனின் உரிய தூதுவர் காரியாலயங்களின் ஊடாக உடல்கள் அடையாளம் காணப்பட வேண்டும்.
அதேபோன்று உள்நாடு வெளிநாடு என்று சாதாரணமாக நிறத்தினை மையமாக வைத்து கண்டெடுக்க முடியும் எனினும், ஆசிய நாட்டவர்களை அடையாளம் காண்பதில் இது சிக்கல் நிலையை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான நிலையில் கொழும்பு பிரதான சட்ட வைத்திய பிரேத அறையில் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போது சிதைவடைந்த பாகங்கள் தொடர்பில் முதல் கட்ட கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட போது நேற்றைய தினம் வரை அதன் எண்ணிக்கை 113ஆக குறைவடைந்திருந்தது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரம்பத்தில் 29 உடல்கள் இருப்பதாக கூறப்பட்டாலும் உரிய பரிசோதனைகளின் பின்னர் இறுதியில் அது 26 உடல்கள் என அடையாளம் காணப்பட்டதாக அணில் ஜாசிங்க தெரிவிக்கின்றார். இதன் அடிப்படையில் நேற்யை தினம் வரை பயங்கரவாத தாக்குதல்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அன்னளவாக 253 மாத்திரமே என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 215 இலங்கையர்களும், இந்திய நாட்டவர்கள் 11 பேரும், பிரித்தானியை சேர்ந்த 8 பேரும், அமெரிக்காவை சேர்ந்த 04 பேரும் உள்ளடங்குகின்றனர். இதேநேரம் இதற்கு மேலதிகமாக 9 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.