அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கொலைக்கான சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் மாணவிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 9 பேரை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
பாடசாலையில் கல்விகற்று வந்த அவர்களின் நடவடிக்கையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அதுதொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பாடசாலை ஆசிரியரொருவர் குறித்த மாணவிகளின் கொலை சதித்திட்டத்தை கண்டறிந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 8 பக்கங்களை கொண்டதாக கொலைக்கான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவிகள் இருவரும் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இதுவரை வழக்கு தொடரப்படவில்லை. மாணவிகளிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புளோரிடா மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.