விவசாய உற்பத்திகளை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கே விற்பனை செய்யக்கூடிய புதிய இரு சந்தைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அனுராதபுரம், புளியங்குளம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் வர்த்தக சந்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம்.டபிள்யூ. வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் மேலும் இதுபோன்ற சந்தைகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை வரட்சியினால் விளைச்சல் நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டமும் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம்.டபிள்யூ. வீரக்கோன் மேலும் தெரிவித்துள்ளார்.